தனித்திறமையில் ஒற்றைக் கம்பு சுற்றுவதில் சிறந்த வீரர் பரிசு பெற்ற மாணவன்.

சென்னை ராயபுரத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, நூர்முகமது & லாலா மியான் சிலம்பம் பள்ளியில் 156 ஆவது ஆண்டு விழா மற்றும், கலை மாமணி ஷாஜி. L. ஜான்பாவா அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவு விழா மற்றும் சென்னையில் நூர்முகமது & லாலா மியான் சிலம்பம் பள்ளியின் 10வது ஆண்டு விழா முப்பெரும் விழாவை முன்னிட்டு ஆடவர்/ மகளிர் காண மாவட்ட அளவிலான மினி, சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், மற்றும் சீனியர், மாபெரும் சிலம்பம் போட்டு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பத்து வயதுக்குட்பட்டோருக்கு தனித்திறமை ஒற்றைக் கம்பு தனி திறமை போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக சிலம்பம் சுற்றி, மிகச்சிறந்த சிலம்பம் சுற்றும் விளையாட்டு வீரர் என்ற பரிசினை வென்ற K.N.உபேந்தர் என்ற மாணவன். சிறப்பாக விளையாடிய K.N.உபேந்தர் என்ற மாணவனுக்கு
திரு, வி, க, நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு சிறை துறை அதிகாரி ஐ ஜி கனகராஜ் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சென்னை மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கோப்பை மற்றும் சிலம்பம் சுற்றும் கம்பினை பரிசாக வழங்கி கௌரவித்தனர் மேடையில் மாணவனை கௌரவிக்கும்போது சிலம்பம் பயிற்சி MASTER முகமது ஹபிப் அவர்கள் உடன் இருந்தார்.

About admin

Check Also

SRILA CHATTERJEE BRINGS AFFORDABLE ART TO CHENNAI

Dates: 6th to 8th March Time: 11 am – 7 pm Venue: The Folly at …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat