2022ம் ஆண்டுக்கான மேம்பட்ட கணினி மற்றும் தகவல் சர்வதேச மாநாட்டை நடத்திய சிமேட்ஸ் பொறியியல் கல்லூரி 

சென்னை, செப்டம்பர் 2022: சிமேட்ஸ் பொறியியல் கல்லூரி, கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் 2022ம் ஆண்டுக்கான மேம்பட்ட கணினி மற்றும் தகவல் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், பட செயலாக்கம், மற்றும் ஆகுமென்டட் ரியாலிட்டி மற்றும் வீடியோ ரியாலிட்டி, போன்ற தற்போதைய தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி விளக்கக்காட்சிகள் மற்றும் முக்கிய உரைகள் மூலம் இந்த மாநாடு கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கும் பிற நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவுத் துறைத் தலைவர் டாக்டர் சரவணன்.எம்.எஸ் வாழ்த்துரை வழங்கினார். மாண்புமிகு டாக்டர் சதாராம்சிவாஜி, சிமாட்ஸ் துணைவேந்தர்,

மாநாட்டை துவக்கி வைத்து, நிகழ்ச்சி புத்தக பதிப்புகளை வெளியிட்டார். MeiTY, தேசிய தகவல் மையத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குனர், திரு கார்த்திகேயன் SP அவர்கள் தலைமை உரையாற்றினார். இந்த மாநாட்டில் 253 தாள்கள் பதிவு செய்யப்பட்டன, மொத்தம் 112 வெளி பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர், இவர்களில் 74 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும் 38 பங்கேற்பாளர்கள் ஆன்லைனிலும் தங்கள் பதிவுகளை வழங்கினர்.

About admin

Check Also

Minimally Invasive Spine Surgeons Association of Bharat Annual Conference 2026

Minimally Invasive Spine Surgeons Association of Bharat is an organization which is one of the Spine …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat