மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மத்திய மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னிபாத் திட்டத்தை கண்டித்து வில்லிவாக்கம் சர்க்கிள் ஏற்பாட்டிலும்
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையிலும் சர்க்கிள் தலைவர்கள் வில்லிவாக்கம் ஜான்சன் , ஐயப்பன் , ஷியாம் முனிசாமி ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் அயன்புரம் சரவணன் , எஸ். ரஞ்சித்குமார் , ஏ . ஆர் . எஸ் . எம் . அப்துல் காதர் , மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ விக்ரம் , மாவட்ட மாணவரணி தலைவர் வினோத் , மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் வி. சஞ்சய் , ஏழுமலை மாவட்ட நிர்வாகிகள் டிராவல்ஸ் ராஜேஷ் , சந்தானம் , எஸ்.கே. ராஜ் , உமாபாலன் , சக்கரவர்த்தி , ஆர். டி . குமார் , சர்க்கிள் துணை தலைவர்கள் டி.வில்சன், கே.தண்டபாணி , வட்ட தலைவர்கள் பழனி, செந்தில்நாதன் மணிகண்டன் , எம். டி . பாக்யராஜ், எஸ் ரஞ்சித் , வெங்கடேசன் , குமாரமங்கலம், விஸ்வநாதன், அறிவுச்சுடர், மற்றும் விக்னேஸ்வரன் செல்வராஜ் , சந்திரன், மணி , மாநில, மாவட்ட, சர்க்கிள், வட்ட நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About admin

Check Also

முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார் – இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் ஆவேசம்!

சென்னை, ஏப்ரல் 19: இந்திய சுயராஜ்ய கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat