காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 263 குறை தீர்மனுக்களை பெற்று நடவடிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் இன்று (05.09.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல்துறை வடக்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 263 குறை தீர் மனுக்களை பெற்றார்.


இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட 263 மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப, (தலைமையிடம்), திரு.K.S.நரேந்திரன் நாயர், இ.கா.ப., (வடக்கு), காவல் இணை ஆணையாளர் (வடக்கு மண்டலம்) திரு.பிரவேஷ் குமார், இ.கா.ப., துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

About admin

Check Also

GCP personally called 90 Police officers and personnel on their birthdays and congratulated

On the orders of the Commissioner of Police, Greater Chennai Police, Tr.Sandeep Rai Rathore, IPS., …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat